×

9 தாசில்தார் பணியிட மாற்றத்தில் குழப்பம்

மதுரை மாவட்ட தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய ரெகுலர் தாசில்தார்கள் ஆனந்தி,  விஜயலெட்சுமி, செல்வராஜ், அனீஸ்சத்தர், கோபி, சிவகாமிநாதன், நாகராஜன், தனலெட்சுமி,  இளமுருகன் ஆகியோர் மதுரை மாவட்டத்திற்குள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இவர்கள் பிப்.28ம் தேதி பொறுப்பேற்க வேண்டும் என கலெக்டர் உத்தரவில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் பிப்.27ம் தேதி இரவு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் உத்தரவில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதிதாக ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்பட்ட ஆனந்தி, இளமுருகன், நவநீதகிருஷ்ணன், விஜயலெட்சுமி, அனீஷ்சர்தர் ஆகியோர் தேனி மாவட்டத்திற்கும், செல்வராஜ், தனலெட்சுமி ஆகியோர் விருதுநகர் மாவட்டத்திற்கும், கோபி, சிவகாமிநாதன், நாகராஜன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இரவோடு இரவாக பொறுப்பில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். தாசில்தாராக பதவி ஏற்காமல் இருக்கும் இவர்களுக்கு பதவி ஏற்றது போல், பணியிட மாற்றம் செய்த உத்தரவால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை