×

அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு தர்ணா

புதுச்சேரி, மார்ச் 1: புதுவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு தர்ணாவில் ஈடுபட்டனர். புதுவை அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம், பதவி உயர்வு, ஊதிய நிலுவை,  போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட நாட்களாக அரசிடம் வலியுறுத்தி  வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் பிப்.28ம்தேதி  தர்ணாவில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று சாரத்தில்  உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் முன்பு திரண்ட  150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு தர்ணாவில்  ஈடுபட்டனர்.

சங்கத் தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர்  தாட்சாயிணி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளனம் கவுரவ தலைவர்  பாலமோகனன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்  நலச்சங்கம் விஜயலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்