×

ஆலங்குளத்தில் நூலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

ஆலங்குளம், மார்ச் 1:   ஆலங்குளத்தில் உள்ள  நூலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.தற்போது  நூலகத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 10 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆலங்குளம் எம்.எல்.ஏ பூங்கோதை, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மற்றும் நூலக ஆணைக்குழு சார்பில் ரூ.12.5 லட்சம் என ரூ.27.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு பூங்கோதை எம்.எல்.ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ், நூலக ஆய்வாளர் காஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் பழனீஸ்வரன் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் செல்வி, உதவி ஆய்வாளர் சந்தனசெல்வி, திமுக நகர செயலர் நெல்சன், வாசகர் வட்டத் தலைவர் தங்கசெல்வம் ஆகியோர் விழாவில் பேசினர். நூலகர்கள் பிரம்மநாயகம், சுந்தர், செல்லப்பன், குமார் ராஜா, வெற்றிவேலன், மகேஸ்வரி, முருகேசன் முத்து, காங்கிரஸ் மாவட்ட செயலர் ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம், மனவளக்கலை மன்ற தலைவர் ஆதித்தன், உள்பட புரவலர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags : Folding ceremony ,library ,Alangulam ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...