×

முதுநகரில் அதிமுக பொதுக்கூட்டம்

கடலூர், மார்ச் 1: கடலூர் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் துறைமுகம் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் நகர செயலாளர் குமரன் தலைமையில் நடந்தது. கடலூர் மாவட்ட கழகச் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,    நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு யாரை வேட்பாளராக அறிவிக்கிறார்களோ அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயலாளர் அர்ஜுனன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், நகர அவைத்தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வி, வேல்முருகன், மணி, தமிழ்ச்செல்வன் மற்றும் செந்தில், மார்க்கெட் சுரேஷ், 31வது வார்டு பாசறைச் செயலாளர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் கந்தன் நன்றி கூறினார்.

Tags : AIADMK ,meeting ,back yard ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...