×

வீட்டை உடைத்து கொள்ளை

உத்திரமேரூர், மார்ச் 1: உத்திரமேரூர் அடுத்த மானம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (76). ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இவரது மனைவி ரெஜினா. ஓய்வு பெற்ற ஆசிரியை (70). நேற்று முன்தினம், இருவரும் சென்னையில் உள்ள உறவினரை பார்க்க சென்றனர். நேற்று காலை பால்சாமியின் வீட்டு பின்பக்க கதவு திறந்து இருந்தது. இது பற்றி அறிந்ததும் அவர்கள், உடனடியாக வீடு திரும்பினர். அங்கு, பீரோவை உடைத்து அதில் இருந்த 25 சவரன் நகை, ரூ50 ஆயிரம், பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி பெருநகர்போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்