×

சுற்றுச்சூழல் போராளி முகிலனை மீட்டுத்தர கோரி கரூரில் பல்வேறு அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 1: சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராளி முகிலனை மீட்டுத் தரக்கோரி பல்வேறு அமைப்புகளின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திக மாவட்ட தலைவர் தனபால் தலைமை வகித்தார். இதில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, சாமானிய மக்கள் கட்சி, சுய ஆட்சி இந்தியா, தையல் தொழிலாளர் சங்கம், அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், இந்திய குடியரசுக் கட்சி உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராளி முகிலனை விரைந்து மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : organizations ,Karur ,militia ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...