×

கரூரில் இன்று பிளஸ் 2 ேதர்வு துவக்கம் 11,383 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

கரூர், மார்ச் 1: கரூரில் இன்று துவங்கவுள்ள பிளஸ் 2 தேர்வினை 11383 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எழுதுகின்றனர்.தமிழகம் முழுதும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் டைபெறவுள்ளது.கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வினை 105 பள்ளிகளை சேர்ந்த 5472 மாணவர்களும், 5911 மாணவிகள் என மொத்தம் 11383 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 40 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், நிலையான பறக்கும் உடை உறுப்பினர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் என 934 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வுகள் சிறப்பாக நடத்தவும், தேர்வுகளின் போது முறைகேடுகளை தடுக்கவும், தேர்வு மையங்களை திடீரென பார்வையிடவும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...