×

ஜெருசலேம் புனித பயண நிதியுதவிக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர், மார்ச் 1: ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல தமிழக அரசு சார்பில் ஒருவருக்கு ₹20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களின் புனித தலங்களை உள்ளடக்கியது.இதற்கான விண்ணப்ப படிவங்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். www.bcmbcmw.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை நிபந்தனைகள், விதிமுறைகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில், ‘‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’’ என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், கல்சமஹால் பாரம்பரிய கட்டிடம் முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Christians ,travel financing ,Jerusalem ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்