தூத்துக்குடி, பிப். 28: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மகளிர் அணி மாநில செயலாளருமான கனிமொழி எம்.பி., இன்று (28ம் தேதி) காலை 10 மணிக்கு சாயர்புரம் டாக்டர் ஜியு போப் பொறியியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து காலை 11 மணிக்கு நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். நண்பகல் 12 மணிக்கு நாசரேத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 3 மணிக்கு திருச்செந்தூரில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கோலப்போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகள் வழங்குகிறார்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.