×

ஆர்டிஓக்கள், ஆய்வாளர்கள் தீவிர வாகன சோதனை

திருச்சி, பிப். 28:  திருச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் இணை ஆணையர் உத்தரவின்பேரில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று இணை ஆணையர் உமாசக்தி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநகரில் உள்ள ஆட்டோ, வாடகை கார்கள், கேப்ஸ்களில் தீவிர சோதனை நடத்த வேண்டும். சாலைவரி முறையாக கட்டப்பட்டுள்ளதா, ஆவணங்கள் முறையாக உள்ளதா என்பது குறித்து கண்டறிந்து ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி  மற்றும் எதிரே உள்ள பள்ளி அருகில், திருப்பராய்துறை சுங்கசாவடி, கலைஞர் அறிவாலயம், கே.கே.நகர், தென்னூர் சாலை, பழைய பால்பண்ணை அருகில் தீவிர வாகன சோதனை நடந்தது.

இந்த ஆய்வில், ஆர்டிஓக்கள் சுப்ரமணி, பாண்டியன், கணேஷ் மற்றும் ஆய்வாளர்கள் சம்பத்குமார், சத்தியமூர்த்தி, முரளி, ஆனந்த், தனசேகரன், ரவிசந்திரன், உமாமகேஸ்வரி, அனிதா, கோவிந்தராஜ், மீனாட்சி, ஜெயதேவராஜ், சரவணபவன், செல்வகுமார், நெடுஞ்செழிய பாண்டியன், சுந்தரராமன், பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

Tags : inspectors ,vehicle testing ,
× RELATED புகையிலை பொருட்கள் கடத்தல்