×

குரோம்பேட்டையில் 4 குடிசைகள் எரிந்து நாசம்

தாம்பரம்: குரோம்பேட்டை கோதண்ட நகர் 1வது தெருவில் நேற்று மதியம் குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. பின்னர், சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேகமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அதற்குள் 4 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அந்த வீடுகள் முனுசாமி, மூர்த்தி, ரஜினி, ராஜகோபால் ஆகியோரது என தெரியவந்தது. இவ்விபத்து, மின்கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Tags : cottages ,
× RELATED கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின்...