×

சேலம் காரிப்பட்டியில் 2 ரவுடிகள் மீது குண்டாஸ் பாய்ந்தது

சேலம், பிப்.28: சேலத்தை அடுத்துள்ள கூட்டாத்துப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் ஜெகன் (எ) ஜெகநாதன்(30), பிரபல ரவுடி. இவர், தனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான கண்ணன் (எ) மாயக்கண்ணனுடன் (31), வழிப்பறி வழக்கில் காரிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரவுடிகள் ஜெகன், மாயக்கண்ணன் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி ஜெகன் மீது 14 வழக்கும், மாயக்கண்ணன் மீது 8 வழக்கும் உள்ளன.

தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் இருவரையும், குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, மாவட்ட எஸ்பி தீபாகனிகர் மூலம் கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ரோகிணி, ஜெகன், மாயக்கண்ணன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் போலீசார் வழங்கினர்.

Tags : rounds ,
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...