தேன்கனிக்கோட்டை, பிப்.28: அஞ்செட்டி அருகே, மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். அஞ்செட்டி எஸ்எஸ்ஐ, மணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வண்ணாத்திப்பட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணல் கடத்த முயன்ற ஏ.புதூர் கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் பெரியண்ணன் (36) என்பவரை கைது செய்து, ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.