×

மில் தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவானவர் கேரளாவில் கைது

திருவில்லிபுத்தூர், பிப். 28: திருவில்லிபுத்தூர் அருகே, மில் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருவில்லிபுத்தூர் அருகே, தனியார் மில்லில் பணிபுரிந்த நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ரகுவரன் உள்ளிட்ட 12 பேர், நாகமங்கலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வாடகை வீட்டு மொட்டை மாடியில் ரகுவரன் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக மல்லி போலீசார், வீட்டில் இருந்த 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், வீட்டிலிருந்து கரூர் பகுதியை சேர்ந்த கோகுலமூர்த்தி (41), அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (42) ஆகியோர் மாயமானதாக தெரிய வந்தது. இவர்களை பிடிக்க திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தனிப்படை போலீசார், கோகுலமூர்த்தியை கேரள மாநிலம் குருவாயூரில் கைது செய்தனர். தலைமறைவான லட்சுமணன், திருநெல்வேலியில் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Tags : murder ,mill worker ,Kerala ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...