×

வெயில், மழையால் அவதி நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், பிப். 28: ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஏ.ஆர்.மங்கலம் விலக்கு ராமேஸ்வரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த விலக்கு பகுதி பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி தான் ஏ.ஆர்.மங்கலம், கொண்னக்குடி, பகவதி மங்கலம், விளத்தூர், நடியக்குடி, குமரன் காளி, கள்ளிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இங்கு நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் கோடை காலத்தில் வெயிலிலும், மழை காலத்தில் மழையிலும் அவதிப்பட வேண்டிய சூழல் உள்ளது.

ஆகையால் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு நிழற்குடையை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியது, நாங்கள் எங்களது கிராமங்களில் இருந்து எந்த பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும் டவுன் பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலமோ அல்லது திருவாடானை தான் போக வேண்டும். இந்த சூழ்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், வயதானவர்களும் குழந்தைகளும் வெயிலில் நிற்க வேண்டிய நிலை இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்கள் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கட்டித்தர முன்வரவேண்டும் என்றனர்.

Tags : Vayal ,travelers ,
× RELATED மீஞ்சூர் அருகே தனியார் நிறுவனம்...