×

இன்றைய பலன்கள் உள்ளே வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை நூறுநாள் வேலை பெண்கள் முற்றுகை

வாடிப்பட்டி, பிப்.28: தங்கள் மீது அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நூறுநாள் வேலை பார்க்கும் பெண்கள் வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது வாடிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது ராமையன்பட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த நூறுநாள் வேலை பார்க்கும்  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று பணிகளை புறக்கணித்து வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் ஊராட்சி செயலாளர் ரேவதி மற்றும் அவரது கணவர் திருப்பதி மீதான தனிப்பட்ட பிரச்னைக்காக நடக்காத ஒன்றை கூறி சிலர் எங்கள் கிராம பெண்கள் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.

இதனால் நூறுநாள் வேலையில் ஈடுபடும் பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தவறான தகவல் தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர். சம்பவ இடத்திற்க வந்த போலீசாரும், ஒன்றிய அதிகாரிகளும் இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்துவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : women ,siege ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...