×

மேட்டுப்பாளையத்தில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

பெரம்பலூர், பிப். 28: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 1ம்தேதி 3வருவாய் கிரா மங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசால் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு மனுக்களை அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு ஆணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. வேப்பந்தட்டை தாலுகாவில் மேட்டுப்பாளையம் (தெற்கு), குன்னம் தாலுகாவில் பேரளி (தெற்கு), ஆலத்தூர் தாலுகாவில் ஆதனூர் (தெற்கு) ஆகிய 3 வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நாளை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

Tags : Special Tumble Camp ,Mettupalayam ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்