×

பில்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு முன்விரோதத்தில் மூதாட்டியை தாக்கியவர் கைது

செம்பட்டி, பிப். 28: நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை  சேர்ந்தவர் சுசீலா மேரி (59). இவர் தனது மகள் செல்வராணியுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் வீட்டருகே உள்ள பிச்சை மகன் லாரி டிரைவர் மகேந்திரன் (28) என்பவருக்கும் இடப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மகேந்திரன் வீட்டிற்குள் புகுந்து சுசீலா மேரி, செல்வராணியை தாக்கி தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் முகமதுஅப்துல் வழக்குப்பதிந்து மகேந்திரனை கைது செய்து, நிலக்கோட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ரிஸ்னா பர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் மகேந்திரனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் அவரை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

Tags : Bailamayankanpatti Jallikattu ,
× RELATED திண்டுக்கல்லில் திடீர் மழை