முத்துப்பேட்டை, பிப்.28: முத்துப்பேட்டையில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்க ஒன்றிய சிறப்பு கூட்டம் ஒன்றியத் தலைவர் சற்குணம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆசாத்,, ஓஎச்டி சங்க மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட தலைவர் சாந்தகுமார் ஆகியோர் சங்க ஆலோசனை மற்றும் வளர்ச்சி குறித்து பேசினர்.
இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 2000ம் ஆண்டு முதல் பணி அமர்த்தப்பட்ட 50 பணியாளர்களுக்கு ரூ. 2000க்காண உத்தரவு நகல் வழங்கப்பட்டது. வரும் மார்ச் 6ம் தேதி அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மனு கொடுக்கும் போராட்டத்தில் முத்துப்பேட்டை ஒன்றியத்தி லிருந்து ஓஎச்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள் பள்ளிக் கூட்டுனர்கள், தூய்மைபடுத்துவார்கள் அனைவரும் கலந்து கொள்வது, 2000ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட மேல்நிலை தொட்டி இயக்குனர்களுக்கு அரசு உத்தரவு வழங்கிய அலுவலர் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து துண்டு பிரசுரம் வெளியிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் துணைச்செயலாளர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.