×

வலிப்பு ஏற்பட்டதால் பூட்டிய கழிவறையில் பாதுகாவலர் தவிப்பு தீயணைப்புத்துறை மீட்டது

கும்பகோணம், பிப். 28: கும்பகோணம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பூட்டிய கழிவறையில் வலிப்பு ஏற்பட்டு தவித்த பாதுகாவலரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கும்பகோணம் பக்தபுரி தெருவில் தனியார் அடிக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் பாதுகாவலராக வேலை பார்ப்பவர் ஆடுதுறை வடகரையை சேர்ந்தவர் சேகர் (55). இவருக்கு வலிப்புநோய் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2வது மாடியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது கழிவறையின் உள்புறம் தாழ்ப்பாள் போட்டவாறு சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சேகருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வலியால் துடித்த சேகரின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வந்து கழிவறை கதவை உடைத்து சேகரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags : firefighters ,
× RELATED வாலாஜாவில் விளையாடியபோது தலையில்...