புதுச்சேரி, பிப். 27: கோரிமேடு அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விளையாட்டு போட்டி நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஜிப்மர் திடலில் நடந்தது. நிறுவன புலமுதன்மையர் ஜெயந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நலவழித்துறை இயக்குநர் ராமன் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், விளையாட்டு மற்றும் பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனநலம் மேம்பட்டு ஒருவரின் தனித்தன்மை வளர்ச்சி அடையும் என்று கூறினார். இவ்விழாவில் ஆசிரியர்கள் ரத்தீஷ், சாலமன், மார்க்ரெட், கவிதா, சரவணன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.