×

சாராயம் கடத்தலுக்கு உடந்தை புதுவை சாராயக்கடை உரிமையாளர் கைது

கடலூர், பிப். 27: சாராய கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புதுச்சேரி சாராயக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து அதிக அளவில் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவின்பேரில் கடலூர்- புதுச்சேரி எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் கருணாகரன், மவுலீஸ்வரர் ஆகியோர் கண்ணாரப்பேட்டை பகுதியில் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த ஆட்டோவை சோதனையிட்டதில் அதில் 120 லிட்டர் சாராயம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாராயம் கடத்தி வந்த புதுச்சேரி குருவிநத்தம் பகுதியை சேர்ந்த கலைமணி (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தீவிர விசாரணையில் சாராயம் கடத்தலுக்கு உடந்தையாக புதுச்சேரி மாநிலம் சின்ன ஆராய்ச்சி குப்பம் நாகராஜன் (55) என்பவர் இருந்தது தெரியவந்தது. மேலும் நாகராஜன் புதுச்சேரி அரங்கனூரில் சாராயக்கடை நடத்தி வருவதும் உறுதி செய்யப்பட்டது.
 அவரது கடையில் இருந்து கடலூருக்கு சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் பிரபாகரனை தேடி வருகின்றனர்.

Tags : owner ,shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி