×

டிபன்கடை உரிமையாளர் மகனை தாக்கியவர் கைது

பண்ருட்டி, பிப். 27:  பண்ருட்டி அருகே டிபன்கடையில் தகராறு செய்து உரிமையாளர் மகனை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (55). இவர் அதே பகுதியில் டிபன்கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் பிரகதீஸ்வரனை கடையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது நத்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் திருவேங்கடம் (42) என்பவர் கடைக்கு வந்து இட்லி கேட்டுள்ளார். அதற்கு பிரகதீஸ்வரன் இட்லி தீர்ந்துவிட்டதாக கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திருவேங்கடம் பிரகதீஸ்வரனை அசிங்கமாக திட்டி சரமாரி தாக்கி உள்ளார். படுகாயம் அடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி இவரது தந்தை அருணாசலம் புதுப்பேட்டை போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், திருவேங்கடத்தின் மீது வழக்கு பதிந்து கைது செய்தார்.

Tags : owner ,Tibetan ,
× RELATED பல்வேறு துறைகளில் பணிபுரிய 138 பேருக்கு பணி நியமன ஆணை