×

ஜெருசலம் புனித பயணம் கிறிஸ்துவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், பிப். 27: திருப்பூர் மாவட்டத்தை ேசார்ந்த கிறிஸ்துவர்கள் ஜெருசலம் புனித பயணம் செய்ய தமிழக அரசு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தை ேசார்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலம் புனித பயணம் செய்ய தமிழக அரசு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இந்த புனித பயணத்தில் பெத்லஹேம், ஜெருசலம், நாசரேத், ஜோர்டான், கலிலேயா சமூத்திரம் ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர். இதற்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.  மேலும் விண்ணப்படிவம் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், கலசமஹால் பாரம்பரிய கட்டிடம் முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Tags : Christians ,Jerusalem ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்