×

12ம் வகுப்பு பொது தேர்வை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

ஊட்டி, பிப். 27: 12ம் வகுப்பு பொது தேர்வு நாளை மறு நாள் ( மார்ச் 1ம் தேதி) துவங்கும் நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.   12ம் வகுப்பு பொது தேர்வு நாளை மறுநாள்(மார்ச் 1ம் தேதி) துவங்குகிறது. அதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. இதை முன்னிட்டு தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. பொது தேர்வுகள் மற்றும் பள்ளி முழு ஆண்டு தேர்வுகள் முடியும் வரை, சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைந்து காணப்படும். அதன் பின்னரே அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags : Travelers ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை