×

தொட்டியபாளையம் பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா

சோமனூர், பிப்.27:  சோமனூர் அடுத்த கரவளிமாதப்பூர் ஊராட்சியில் உள்ள தொட்டியபாளையம் அரசு பள்ளிக்கு, பெற்றோர்கள் கல்வி சீர்வழங்கும் விழா நேற்று நடந்தது.  தொட்டியபாளையம் அரசு பள்ளிக்கு பொது மக்கள், முன்னாள் மாணவர்கள், அரிமாசங்கம்,  சமூக அமைப்புகளும் உதவி செய்து வருகின்றன. நேற்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான குடங்கள், ஜக்கு, எழுது கோல், நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை தங்களது சொந்த செலவில் வாங்கி அதை ‘கல்வி சீர்’ என்ற பெயரில் ஊர்வலமாக எடுத்து வந்து தொட்டியபாளையம் அரசு பள்ளியில் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காந்திஜோதி தலைமை தாங்கினார்.

Tags : education ceremony ,school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி