×

மணப்பாறை அருகே தனியார் கல்லூரியில் 19 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்சி, பிப்.27: மணப்பாறை அருகே தனியார் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 19 ஆண்டுகளுக்கு பின்  சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
 மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 1997-2000ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி முதல் முறையாக 19 ஆண்டுகள் கழித்து கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதற்காக 23ம் தேதி இரவு கூடிய மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளிநாடு, வெளிமாநிலங்களில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். இந்நாள், முன்னாள் ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

மாணவர்கள் அனைவருக்கும் ‘கேசிஏஎஸ் 1997-2000’ முத்திரை பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தங்களுடன் படித்து மறைந்த 6 மாணவ, மாணவியர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மாணவ, மாணவியர் தாங்கள் படித்த வகுப்பறைகள், கல்லூரி வளாகங்களில் செல்பி எடுத்துக் கொண்டனர். மாலையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்த பின் அனைவரும் பிரியாவிடையுடன் கலைந்து சென்றனர். வாட்ஸ்அப், முகநூலில் குழுக்கள் துவங்கி மாணவர்களை இணைத்தனர். ஆண்டுதோறும் இதுபோன்ற சந்திப்பு நடத்த வேண்டும். 25ம் ஆண்டு குடும்பத்துடன் அனைவரையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. ஏற்பாட்டை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags : meeting ,Alumni ,college ,Manaparai ,
× RELATED உத்தரவாதம் தந்து மருத்துவ...