×

திருக்கழுக்குன்றம் திமுக சார்பில் பேரூராட்சி சபை கூட்டம்

திருக்கழுக்குன்றம், பிப்.27: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சபை கூட்டம் திருக்கழுக்குன்றம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி தலைமையில் நடந்தது. பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ கலந்து கொண்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதில், பேரூராட்சி பகுதியில் நிலவும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள், வீட்டு மனைப் பட்டா ஆகியவை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதனை கேட்டறிந்த தா.மோ.அன்பரசன், சில பிரச்னைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக் கூறி சரி செய்வதாகவும், சில முக்கிய பிரச்னைகளை திமுக ஆட்சி அமைந்தவுடன் நிச்சயம் தீர்த்து வைக்கப்படும் என உறுதியளித்தார். கட்சி நிர்வாகிகள் விஸ்வநாதன், துரை, தேவதாஸ்,     செல்வராசன், ரமேஷ், சுகுமார், விஜயன், கோபாலகிருஷ்ணன், குமாரகுருசாமி, சத்தியமூர்த்தி, சரவணன்,  செல்வக்குமார்,    வளர்மதி தேவராஜன், செங்குட்டுவன், வெங்கட், அரிதினேஷ், ரஞ்சித்குமார், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Panchayat Council Meeting ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி