×

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவுக்காக அதிமுக ேமடையில் அமமுக அன்னதானம்

கும்மிடிப்பூண்டி, பிப்.27: கும்மிடிப்பூண்டியில் அதிமுகவினர் விழாவிற்கு அமைக்கப்பட்ட மேடையில் அமமுகவினர் நிகழ்ச்சி நடத்தி அன்னதானம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஏற்பாட்டில்,  அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இதற்காக பஜார் பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் நேற்று அமமுகவினர், ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் எம்.எல்.ஏ.  தண்ணீர் குளம் ஏழுமலை பங்கேற்றார். அவர் 2 மணி நேரம் காலதாமதமானதால் வெயிலில் காத்திருந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர். தலையில் துண்டுபோட்டுக்கொண்டிருந்தனர். 2 மணி நேரத்துக்கு பிறகு வந்த அவர், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இதுகுறித்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுகவினர், அமமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதிமுக விழாவிற்கு அமைக்கப்பட்ட மேடையில், அமமுகவினர் நிகழ்ச்சி நடத்திய சம்பவம் இரு கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Amitabh Annadhanam ,AIADMK ,Jayalalithaa ,birthday party ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி