×

தொழிலதிபர் வீட்டில் ₹15 லட்சம் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

சென்னை, பிப்.27: தொழிலதிபர் வீட்டில் ₹15 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிய வேலைக்கார பெண் சிசிடிவி கேமரா பதிவு மூலம் பிடிபட்டார். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 16வது அவென்யூவை சேர்ந்தவர் நரசிம்மன் (80). தொழிலதிபர். இவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். நரசிம்மன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வைத்திருந்த நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாயமானது. இதுபற்றி வேலைக்கார பெண் மற்றும் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தினார். இதன்பிறகும் வீட்டில் இருந்து 22 கிராம் நகை மற்றும் ₹3 ஆயிரம் மாயமானது.

இதையடுத்து, நரசிம்மன் வீட்டில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வேலைக்கார பெண், ஷெனாய் நகரை சேர்ந்த சவிதா (24), பீரோவில் இருந்த நகைகளை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவரை கையும் களவுமாக பிடித்து, சிசிடிவி கேமரா பதிவுடன், சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் கடந்த 6 மாதமாக கொஞ்சம், கொஞ்சமாக ₹15 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : industrialist house ,
× RELATED திருவண்ணாமலை தொழிலதிபர் வீட்டில் 3 மணி நேரமா வருமான வரித்துறை சோதனை