×

வெள்ளாற்றில் திருட்டுதனமாக மணல் அள்ளிய 3 பேர் கைது வாகனங்கள் பறிமுதல்

அறந்தாங்கி,பிப்.27: அறந்தாங்கி பகுதியில் மணல் கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். ஆவுடையார்கோவில் அருகே உள்ள வடக்கைர பகுதியில் வெள்ளாற்றில் இருந்து சிலர் டிராக்டரில் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் ஆவுடையார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு டிராக்டர் டிரைலரில் இரும்பாநாடு பகுதியை சேர்ந்த தமிழ்மாறன், பூங்குடியை சேர்ந்த தர்மராஜ், வடக்கரை சேர்நத பழனி என்ற பழனிச்சாமி ஆகியோர் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக போலீசார் விரைந்து சென்று தமிழ்மாறன், தர்மராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி பகுதியில் வெள்ளாற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த கரிகாலன் என்பவரை அறந்தாங்கி போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags : smuggling ,
× RELATED ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டாசில் கைது