×

திருமயத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 10 பேர் காயம்

திருமயம்.பிப்.27: திருமயத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருமயம் தாமரை கண்மாய் திடலில் நேற்று காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோனாபட்டு, திருப்பத்தூர், காரைக்குடி, விராச்சிலை, குழிபிறை, பனையப்பட்டி, பொன்னமராவதி, சிங்கம்புணரி, புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
முதலில் கோயில் காளை அவிழ்க்கப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்திருந்த காளைகளை காளை உரிமையாளர்கள் ஆங்காங்கே அவிழ்த்தவிட்டனர்.

இந்நிலையில் கண்மாய் முழுவதும் பார்வையாளர்கள் நிறைந்திருந்ததால் அவிழ்க்கப்பட்ட காளைகள் நாளாபுறமும் தெரித்து ஓடியது. இதனை அப்பகுதி இளைஞர்கள் துரத்தி ஓடி ஆரவாரம் செய்தனர். அப்போது வெறித்து ஓடிய காளைகள் முட்டியது, தள்ளியது, மிதித்த நிகழ்வுகளில் 10 பேர் காயமடைந்தனர். காமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருமயம் தாமரை கண்மாய் ஆயகட்டுதாரர்கள் மற்றும் கிராமத்தார்கள் செய்திருந்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Thirumayam ,
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது