×

இளையோர் எழுச்சி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர், பிப். 27: அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் (அலகு-1 மற்றும் 3) சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை சேர்ந்த பொதுநல மருத்துவர் சாந்தி, பல் மருத்துவர் கவிதா பிரியா ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். இதைதொடர்ந்து இளையோர் எழுச்சி  என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்மாறன்   சிறப்புரையாற்றினார். பின்னர் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கருணாகரன், செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...