×

மின்வாரிய அதிகாரி வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

பாடாலூர், பிப். 27: பாடாலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.45 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா பாடாலூரை சேர்ந்தவர் வேல்முருகன். நாமக்கல்லில் மின்சார வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஊட்டத்தூர் சாலையில் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, ரூ.45 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
பூட்டியிருந்த வீடு திறந்து கிடப்பதை பார்த்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரியின் மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தார்.  அப்போது நகை, பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Electrician officer ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது