×

காரைக்கால் நில அளவை துறையில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்யூசிஐ வலியுறுத்தல்

காரைக்கால், பிப்.27: காரைக்கால் நில அளவைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை, உடனே சரி செய்யவேண்டும். என, சோஷியல் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா கம்யூனிஸ்ட் (எஸ்.யூ.சி.ஐ) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் சோஷியல் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா கம்யூனிஸ்ட் (எஸ்.யூ.சி.ஐ.) செயற்குழு உறுப்பினர் முகம்மது பிலால் கூறியதாவது: காரைக்கால் மாவட்ட  நில அளவைத் துறை அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக அலட்சியத்தால், பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகத்துக்கு சென்று தீர்வு காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், போதிய ஊழியர்கள் இல்லாததால், மக்களின் கோப்புகள் பல மாதங்களாக தேங்கி கிடக்கின்றது.

மேலும், உதவி இயக்குனர் பணியிடம் கலந்த அக்டோபர் மாதம் முதல் காலியாகவுள்ளது. கோரிக்கை அடிப்படையில் இயக்குனரின் முயற்சியால் உதவி இயக்குனர் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்பட்டு கோப்புகளுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அலுவலகத்தின் முதுநிலை வரைவாளர் விடுப்பில் உள்ளதால் 2 மாதங்களுக்கு மேலாக கோப்புகள் தீர்வின்றி முடங்கியுள்ளது. அதேபோல், பட்டா கோரி விண்ணப்பித்த பொதுமக்கள், ஆண்டுக் கணக்கில் அலைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விடுப்பில் உள்ள முதுநிலை வரைவாளர், மேலும் 6 மாதங்கள் விடுப்பு எடுக்கவுள்ளதாக அலுவலக உறுப்பினர்கள் கூறிவருவது அதிர்ச்சியை அளிக்கிறது. என்றார்.

Tags : Karikal ,field ,SUCI ,
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...