ராசிபுரம்,பிப்.27: ராசிபுரம் நகரில் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போலியோ விழப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை காவல்துறை உதவி ஆய்வாளர் மாணிக்கம், நகராட்சி கமிஷனர் (பொ) நடேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ரோட்டரி சங்க உதவி ஆளுனர் பிரகாஷ், தலைவர் சிவக்குமார், ரோட்டரி கிளப் ஆப் ராயல் தலைவர் செந்தில்குமார், திட்ட சேர்மேன் ராஜூ, துணை சேர்மேன் நந்தலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து தினமாக கடைபிடிக்கப் படுகிறது. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு புகட்டுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலியோ நோய் குறித்தும், தடுப்பு நடைவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய தட்டிகள் ஏந்தியவாறும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 500க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர். பேரணி கச்சேரி தெரு, பழைய பஸ் நிலையம், கவரைத்தெரு, கடைவீதி, ஆத்தூர் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.