×

திருச்செங்கோட்டில் 25 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை

திருச்செங்கோடு, பிப் 27: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று 25 லட்சத்திற்கு பருத்தி மற்றும் எள் விற்பனையானது.திருச்செங்கோடு  வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி மற்றும் எள்  ஏலம் நடைபெற்றத. மாணிக்கம்பாளையம், செருக்கலை, காந்தி ஆசிரமம்,  கரிச்சிபாளையம், கந்தம்பாளையம் இறையமங்கலம், வெள்ளியம்பாளையம், சங்ககிரி,  ஆனங்கூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 500 மூட்டை பருத்தி மற்றும் 205  மூட்டை எள் ஆகியவற்றை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதை கொள்முதல்  செய்ய நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த  வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள்  ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் 5,099 முதல்,  5,399 வரையும், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் 6,295 முதல் 6475 வரையும்  விற்பனையானது. அதுபோல் சிகப்பு எள் கிலோ 110.30 முதல் 142.10 வரையும்,  கருப்பு எள் கிலோ 127.10 முதல் 157.10 வரையும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 500 மூட்டை பருத்தி 10  லட்சத்துக்கும், 205 மூட்டை எள் 15 லட்சத்துக்குமாக மொத்தம் 25  லட்சத்துக்கும் வர்த்தகம் நடந்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : ses ,
× RELATED எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான...