×

தூத்துக்குடியில் கடைகளில் திருடிய வாலிபர் கைது

தூத்துக்குடி, பிப். 27: தூத்துக்குடியில் கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடி தெற்கு புதுதெருவை சேர்ந்தவர் அஜீத்குமார்(21). இவர் அப்பகுதியில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கடை நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு  அவரது கடையிலிருந்த லேப்டாப் டிஸ்பிளே, டிவிடி ரைட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. இதேபோல் ஜார்ஜ்ரோடை சேர்ந்த ஆண்ட்ரூஸ் டிக்சன்(23) என்பவரது கடையிலும் செல்போன் திருடுபோனது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் ஆகும்.

இது குறித்த புகார்களின் அடிப்படையில் மத்தியபாகம் எஸ்ஐ விஜய்கோல்டன்சிங் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயராஜ் ரோட்டில் வாகனசோதனையில் ஈடுபட்ட மத்தியபாகம்போலீசார், தொடர் திருட்டில் ஈடுபட்ட முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சித்திரைலிங்கம்(31) என்பவரை கைது செய்தனர்.

Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி