×

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் டெல்லி குழுவினர் ஆய்வு

ஆண்டிபட்டி, பிப். 27: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வரும் மத்திய அரசின் நலத்திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து டெல்லி குழுவினர் ஆய்வு செய்தனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம பஞ்சாயத்துக்களில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் 100 நாள் குளத்து வேலை, தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை டெல்லி குழுவினர் சண்முகம் தலைமையில் டி.சுப்புலாபுரம், பிச்சம்பட்டி கிராம பகுதியில் ஆய்வு நடத்தினர். முடிந்த, நடைபெற்று வருகின்ற திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் 100 நாள் வேலையாட்களின் பணம் பரிவர்த்தனை சம்மந்தமான வங்கி கணக்கு உள்ளிட்ட விளக்கங்களை வீடுகளுக்குச் சென்று கேட்டறிந்தனர். ஆய்வின்போது ஆண்டிபட்டி பிடிஓக்கள் எபி, முத்துபாண்டி, பொறியாளர் துறையினர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Tags : Andipatti Union ,Delhi ,team ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...