×

நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக திருப்புத்தூரில் இன்று மின்தடை

திருப்புத்தூர், பிப். 27: திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருப்புத்தூர் நகரில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (பிப்.27ம் தேதி) புதன்கிழமை அண்ணா சாலை, மதுரை ரோடு, அஞ்சலக வீதி, பழைய பேருந்து நிலையம், பூமாயி அம்மன் கோயில் பகுதி மற்றும் தென்மாப்பட்டு பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் பாட்சா முகமது தெரிவித்துள்ளார்.

திருப்புத்தூர் பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்தடை செய்யப்படுகிறது என்றும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும், எனவே மின்துறையினர் முன் அறிவிப்பு செய்து மின்தடை செய்ய வேண்டும் என நேற்று தினகரன் நாளிதழில் செய்து வெளியானதையடுத்து இன்று மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : resort ,
× RELATED தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது...