×

ஜெருசலேம் புனித பயணத்திற்கு ரூ.20 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம், பிப்.27: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் தமிழக அரசின் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2018-19ம் ஆண்டு கன்னியாஸ்த்திரி மற்றும் அருட்சகோதரியும் புனித பயணம் மேற்கொள்ள சிறப்பினமாக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் மார்ச்-2019 மாதத்தில் தொடங்கி ஜூன்-2019 வரை பல்வேறு குழுக்களாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். விதிமுறைகள், நிபந்தனைகள், விண்ணப்படிவம் ஆகியவைகளை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “கிறிஸ்தவர்கள்; புனித பயணத்திற்கான விண்ணப்பம்” என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு 15.3.2019 மாலை 5.45-மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Tags : journey ,Jerusalem ,
× RELATED மனவெளிப் பயணம்