×

கஜா சாய்த்த மரத்தால் கல்லறை சடங்கில் சிக்கல்

கொடைக்கானல், பிப். 27: கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில் கஜா புயலில் சாய்ந்த மரம் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் இறந்தவர்களை புதைப்பதில் இடையூறு ஏற்படுகிறது. கடந்த 2018, நவ. 16ம் தேதி ஏற்பட்ட கஜா  புயலினால் கொடைக்கானல் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. ஆயிரக்கணக்கான  மரங்கள் அடியோடு சாய்ந்தும், நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தும்  சேதமடைந்தன. கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியி–்ல ராட்சத குங்கிலிய மரங்கள்  கஜா புயலில் வேரோடு சாய்ந்தன. இதில் சாலையில் விழுந்த மரங்கள்  அகற்றப்பட்டன. ஆனால் கல்லறை பகுதிக்குள் விழுந்த மரங்கள் இதுவரை  அகற்றப்படவில்லை. இதனால் கல்லறை பகுதிக்குள் இறந்தவர்களை அடக்கம் செய்ய  கொண்டு செல்ல இடையூறு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இம்மரங்களை  அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : cemetery ritual ,
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு