×

பட்டிவீரன்பட்டி குப்பை கிடங்கில் தீ

பட்டிவீரன்பட்டி, பிப். 27: பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இங்கு வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சியினர் கொட்டி வைத்துள்ளனர். இந்த காலியிடம் அருகாமையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இக்குப்பையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகைமண்டலம் சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்பேரில் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். விரைந்து தீ அணைக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிக்குள் பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்த பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Pattiviranpatti ,
× RELATED பட்டிவீரன்பட்டி பகுதியில் கொரோனாவால் குறைந்தது மா விலை: விவசாயிகள் கவலை