×

நூலக வாசகர் வட்ட கூட்டம்

உடுமலை,பிப்.26: உடுமலை முதல் கிளை நூலக வாசகர் வட்ட கூட்ட் அதன் தலைவர் லெனின்பாரதி தலைமையில் நடந்தது. நூலகர் பீர்பாஷா வரவேற்றார். வாசகர் வட்ட நிர்வாகிகள் விஜயகுமார், அபிராமிசுந்தரி, கண்டிமுத்து முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 5, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு முறையை கைவிட வேண்டும், அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை நேர உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வாசகர் வட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Tags : meeting ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...