×

அன்னூர் அருகே வைக்கோல் போரில் தீ விபத்து

அன்னூர், பிப்.26:அன்னூர் அருகே வைக்கோல் போரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி நீலாமணி. இவர்கள் வெள்ளாளபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு இவர்களது வீட்டில் உள்ள வைக்கோல் போரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி ராமசாமி வசித்து வந்த குடிசை வீடு மற்றும் கால்நடை கட்டி இருந்த குடிசைக்கும் பரவியது. இந்த விபத்தில் வீட்டில் உளஅள பொருட்கள் எரிந்து நாசமானது.  கால்நடைகளை ராமசாமி தீ பரவுவதற்கு முன்பு வேறு இடத்திற்கு மாற்றியதால் கால்நடைகள் உயிர் தப்பியது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் சேதமடைந்தது.  இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தது. அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Fire accident ,Annapoorna ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...