×

முதியோருக்கு இலவச தங்கும் வசதி ஆதரவற்றோர் விண்ணப்பிக்கலாம்

கோவை, பிப்.26: அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிதியுதவியுடன் மத்திபாளையத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் இலவச உணவு, மருத்துவத்துடன் தங்கும் வசதி உள்ளது. ஆதரவற்றோர் விண்ணப்பிக்கலாம்.
கோவை மாவட்ட நலச்சங்க வெள்ளி விழா நேற்று சர்தார்வல்லபாய் படேல் அரங்கில் நடந்தது. இதில் தலைவர் சண்முகநாதன் வரவேற்றார். கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்தார். கோவை முன்னாள் கலெக்டரும், தற்போதைய வேளாண் கூடுதல் செயலாளருமான கருணாகரன், பர்வீன் சுல்தானா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் இச்சங்கத்தின் தலைவர் சண்முகநாதன் பேசியதாவது: ‘அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிதியுதவிடன் கோவை மாவட்ட நலச்சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திபாளையத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு கட்டடம் கட்டி திறக்கப்பட்டு, அதில் ஆதரவற்ற, ஏழ்மையான, 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச தங்கும் வசதி மற்றும் உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.விழாவில், துணை தலைவர் மோகன் சங்கர், செயலாளர் நந்தினி, மேலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Elders ,accommodation orphans ,
× RELATED எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி...