×

பேராவூரணி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 2 மாணவர் உட்பட 4 பேர் காயம்

பேராவூரணி, பிப். 26: பேராவூரணி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.தஞ்சை மாவட்டம் பேராவூரணி டாக்டர் தேவதாஸ் ரோடு அருகே தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்து தனியார் வாகனத்தில் மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். இந்திரா நகர் பூனைகுத்தி பாலம் அருகே சென்றபோது வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரம் வேன் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவரதன பேராவூரணி வீரமணி நகரை சேர்ந்த ராகவன் (29), உதவியாளரான நாடாகாடு பொற்செல்வி (42) மற்றும் எல்கேஜி மாணவர்கள் ஆவணம் சிவராமன் (3), செங்கமங்கலம் ஸ்ரீநிகாஷ் (3) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து 3 பேரையும் மீட்டு பேராவூரணி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து பேராவூரணி இன்ஸ்ப்பெக்டர் பரமானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Perravurani ,
× RELATED சுற்றுலா பயணிகள் கவலை பேராவூரணி...