×

தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை 1 கீரனுாரில் பரபரப்பு

புதுக்கோட்டை,பிப்.26:  கஜாபுயல் நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் கீரனூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் கஜாபுயல் தாக்கியது. இந்த கஜாபுயல் தாக்கத்தால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசு சார்பில் பலருக்கு இதுவரை நிவாரணத் தொகை கிடைக்க வில்லை. குன்னாண்டார் கோவில் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில், வக்கீல் அண்ணாத்துரை முன்னிலையில் நிர்வாகிகள் கீரனூர் தாலுகா அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விடுபட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கீரனூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.    

Tags : Siege ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...