×

அரசு சிறப்பு நிதி ரூ.2000 பெற 12 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பொன்னமராவதி,பிப்,26: பொன்னமராவதி பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதி ரூ.2000ஆயிரம் பெற 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.     வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.2000 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை பெறுவதற்கு பொன்னமராவதி பேரூராட்சியில் 2 ஆயிரம் பேரும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 கிராம ஊராட்சிகளில் 10 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். யார் யாருக்கு இந்த நிதி கிடைக்கும், கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்திலேயே பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ரூ.2 ஆயிரம் விண்ணப்பிக்க பொதுமக்கள் அலைந்து திரிகின்றனர்.   

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...