×

ஜெயங்கொண்டம் அருகே காட்டு எருமை சாவு

ஜெயங்கொண்டம், பிப்.26: ஜெயங்கொண்டம் அருகே முன்னாள் எம்எல்ஏ வயலில் காட்டு எருமை இறந்த நிலையில் இருந்ததால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமம் அருகே முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் வயல் உள்ளது. நேற்று காலை அவரது மகன் ராகுல்(24)  வயலுக்கு சென்றுள்ளார். அப்போது  வயலில் வித்தியாசமான விலங்கு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக மீன்சுருட்டி போலீசாருக்கும், அரியலூர் மாவட்ட வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் அலுவலகத்தை சேர்ந்தவர்களிடம் கேட்ட போது, இந்த காட்டு எருமை வழிதவறி வந்து இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர். இறந்த காட்டு எருமை தண்ணீர் குடிக்க இடம் இல்லாமல் இறந்து இருக்ககூடும் எனவும் தெரிவித்தனர். மேலும் காட்டு எருமை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அங்கேயே  புதைக்கப்பட்டது.

Tags : buffalo death ,Jayankondam ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...